அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த தமிழீழ மக்களே! இந்தப் பூமிப்பந்தில் சிறு உயிரினம் தொடக்கம் மனித இனம் வரை தமது இருப்பிற்காகவும், நிலைப்பிற்காகவும் போராடியே வாழ்ந்து வந்திருக்கிறது. தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு இனத்தை அழிப்பது என்பது வெறுமனே உயிர் சேதங்களை மட்டுமே ஏற்படுத்தி அழித்துவிடலாம் என்றில்லை. அந்த இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தை அழிப்பதன் மூலமும் இனத்தினிடையே பல உப தலைப்புகளிலும், சில பிரதான தலைப்புகளின் கீழும் பாகுபாடுகளை, பிரிவினைகளை, முறண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் அந்த இனங்களுக்கிடையிலான போட்டியிலும் சிதறடிக்கப்பட்டு அதன் வலுவாக இயங்கும் தன்மை இல்லாதொழிக்கப்படும்.
காலம் காலமாக தமிழினப் பாகுபாடு, பிரிவினை, சாதித்துவம், என்ற சதி வலைகளிற்குள் அடக்கப்பட்டதன் இயல்பாக இயங்கும் நிலையை இழந்து பல வரலாற்று சந்தர்ப்பங்கள் எங்களுக்கு ஒரு மிகப்பெரும் பாடமாக அமைந்துள்ளது.
எதிரிகள் தீட்டிய அத்தனை பாகுபாட்டு நிலைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு ஒற்றுமை, சகோதரத்துவம், தோழமை என்ற பாசப்பிணைப்புகளின் கீழ் எமது மொழி, எமது கலாச்சாரத்தை, எமது பண்பாட்டை எதிர்கால சந்ததிக்கு பல வழிகளிலும் போதித்து அவற்றை காதலிக்க வைக்கவேண்டும்.
நாம் நமது சமுதாயத்தில் பலவீனப் பட்டுள்ளவர்களை பல வழிகளிலும் பலப்படுத்தவேண்டும். அது பொருளாதார ரீதியாகவும், ஒவ்வொருவரையும் பலப்படுத்த வேண்டும். முன்னேற்றகரமான நிலையில் உள்ள எம் இனத்தவரைப் பார்த்து பெமைப்பட்டுக் கொள்ளவேண்மே தவிர பொறாமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. அதே வேளை முன்னேற்றமான நிலையில் உள்ளவர்கள் பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்தவர்களையும் பலம்மிக்கவர்களாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம் யூத மக்களைப்போல் ஒட்டுமொத்தமாக தமிழினம் பலமடைவதன் மூலம் தமிழினம் தன் விடுதலைப்படகை மிக வேகமாக இயக்கமுடியும்.
மிகவும் பலம் மிக்கவர்களும், மிகவும் பலவீனமானவர்களும் என இனம் பல்வேறுபட்ட மட்டங்களில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாயின் துவாரங்கள் உள்ள கப்பலில் கடற்பயணம் செய்வது போன்று அமைந்துவிடும். ஆகவே சமூகத்தில் நிலவும் அத்தனை துவாரங்களையும் அடைத்து சர்வ உலகத்தையும் படைத்த இறைசக்தியின் துணையோடு ஒரு பலமான விடுதலைச்சக்தியாக ஒன்றிணைந்து ஒற்றுமையின் முதன்மை இனமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது இனத்தின் பிரதான இலட்சியமான ஐக்கிய சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு முன்னரிலும் இன்னும் வேகமாக பல வழிகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
எங்களில் எவரையேனும் தாழ்த்துவதன் மூலமோ, ஒதுக்கி வைப்பதன் மூலமோ நாம் பலமடைந்துவிட முடியாது. இன்று உலகப்பரப்பில் வாழும் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் திரண்டு தமது அரசியல், பொருளாதார, கல்வி, சமூக இருப்பைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு "நாடுகடந்த அரசு" ஒரு பெரும் செயற்கரிய சாதனை வடிவாக மக்களின் கரங்கலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை உலகளாவிய தமிழ் மக்கள் ஓர் அணியில் நின்று தூக்கி நிறுத்துவதன் மூலம் எமக்கென தனியான கொடியின் கீழ் ஓர் தாய்வயிற்றுப் பிள்ளைகளாய் நாம் நமக்கான பாதையைத் திறந்து தொடர்ந்து பயணிக்கலாம் என நம்புகிறோம்.
அதேவேளை தமிழர்களாகிய நாம் சிந்துவெளி நாகரீகத்திலிருந்து சிந்திய ஒரு துளியாகவே எம்மை நாம் பார்க்கின்றோம் என்பதால் எக்காலத்திலும் எமது தாய், தந்தையாகிய இந்தியாவின் இறமைக்கும் ஐக்கியத்திற்கும் எதிராக செயற்படமாட்டோம் என்பது மட்டுமல்ல எமது தமிழீழத்தினுள் தமது கால்களை அகலப்பதிக்கும் இந்தியாவிற்கெதிரான அத்தனை சக்திகளையும் நாம் எதிர்பார்ப்போம் என்பதில் நாம் அனைவரும் நம்பிக்கையோடு உறுதிப்படுத்துகின்றோம்.
ஈழத்திலும், மலையகத்திலும் மற்றும் ஏனைய உலகப்பரப்பிலும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் ஒதுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் வாழ்கின்றார்களோ அவர்களின் நல்வாழ்விற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
கிறிஸ்தவர்களுக்கு பைபிள் போலவும், இஸ்லாமியருக்கு புனித குறாண் போலவும் தமிழர்களுக்கு புனித நூலாக திருமூலர், அகத்தியர், ஒளவையார், அகத்தியர், திருவள்ளுவரின் ஒன்றாகச்சேர்த்து அச்சடிக்கப்பட்ட நூல் தான் எங்களுடைய வழிகாட்டியான புனிதனூலாகும். இவற்றை நூலாக்கி அச்சுத்துறையினர் அச்சேற்றி ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் சேர்க்குமாறு உள்ளன்போடு இந்த விடுதலை இயக்கம் வேண்டிநிற்கிறது. அத்தோடு மாதம் ஒரு முறையாவது மாத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடி சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து ஒற்றுமை என்ற பலத்தை கட்டி எழுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம், போன்ற நல் இதயங்களின் பிரதான கனவாகிய தமிழனுக்கென்றொரு நாடு வேண்டும் என்பதை நாம் நிறைவேற்றும்வரை தூங்காது, துவளாது மனம் சோராது எமது பயணத்தை தொடர்வோம்."உலகத்தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்"