வையமெல்லாம் தமிழர்களின் காலடிகள் வைக்காத இடமில்லை
அங்கெல்லாம் சீரோடும் சிறப்போடும் அவர்கள் வாழவில்லை
சித்ரவதை கண்ணீர் தான் அவர்கள் சொத்து
பழங்கால தமிழர்கள் வாழ்வை இன்று
படித்தாலே நெஞ்சில் வீரம் பொங்கும்
வளமான அவர்கள் வாழ்வு போனது எங்கே??
வாட்டுகின்ற கொடுமைக்கு முடிவு எங்கே?
உலகத்து தமிழர் எல்லாம் ஒன்று பட்டால்
ஒரு நொடியில் தமிழர் வாழ்வு உயர்வு கொள்ளும்
இரவென்று ஒன்று இருந்தால் விடிவும் உண்டு
இனமானம் காப்பதுவே நம் கடமை
புயல் வீசி பின்னாலே அமைதி தோன்றும்
பொங்கி எழுங்கள் தமிழர்களே புவியை ஆள்வோம்
படைப்பு
கவிஞர். காட்டுக்கோட்டை கணேசன்